வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் 24 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீடித்தது.

News image

நீர்வரத்து அதிகரித்த நிலையில் காணப்படும் கும்பக்கரை அருவி

Updated On :22 அக்டோபர் 2018, 7:58 pm


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் 24 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீடித்தது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த செப். 29- ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த 20 நாள்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருவதால் அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை 24 ஆவது நாளாக அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். 
சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சோத்துப்பாறை அணையைப் பார்வையிட்டு செல்கின்றனர். 
இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் சுரேஷ் தெரிவித்தது: கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சீரான நீர்வரத்து ஏற்படும் வரை அணைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.