மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 40 ஆண்டுகள் சிறை

தேன்கனிக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு

News image

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாபுவை சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸார். 

Updated On :22 அக்டோபர் 2018, 7:43 pm


தேன்கனிக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம், நீலகிரி காலனியைச் சேர்ந்தவர் பாபு (33). தொழிலாளி. இவர், கடந்த 2016 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 -ஆம் தேதி, பெற்றோர் இல்லாத நிலையில், வீடு புகுந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், உறவினர்கள் அந்தச் சிறுமியை மீட்டனர்.
மேலும், பாபுவை பிடித்து, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, அப்போதைய காவல் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி, வழக்குப் பதிந்து, பாபுவிடம் விசாரணை செய்தார். இதில், அவர், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பாபுவை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி திங்கள்கிழமை தீர்ப்புக் கூறினார். அதில், வீடு புகுந்து சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.9,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.