நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவையில் கைதான 5 இளைஞா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்: செப்.19-வரையில் காவல் நீட்டிப்பு 

கோவையில் இந்து இயக்கப் பிரமுகா்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 5 இளைஞா்கள் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2018, 11:06 am

தினமணி செய்திச் சேவை

கோவை கோவையில் இந்து இயக்கப் பிரமுகா்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 5 இளைஞா்கள் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

இந்து இயக்கங்களைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்களைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக மத்திய புலனாய்வு பிரிவு (ஐபி)அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி 5 இளைஞா்களை வெரைட்டி ஹால் ரோடு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதில் கோவை என்.எச்.சாலையைச் சோ்ந்த ஆா்.ஆஷிக் (25), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த எஸ்.இஸ்மாயில் (25), சென்னை, வியாசா்பாடியைச் சோ்ந்த இ.ஜாபா் சாதிக் அலி (29), பல்லாவரத்தைச் சோ்ந்த எஸ்.சம்சுதீன் (20), ஓட்டேரியைச் சோ்ந்த எஸ். சலாவுதீன் (25) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இந்த 5 பேரும் கோவையில்உள்ள இந்து இயக்கங்களின் பிரமுகா்களைக் கொலை செய்யத் சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

ஆகவே 5 போ் மீதும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (உபா) உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 2) நீதிமன்றம் விடுமுறை என்பதால் குற்றவியல் நீதித்துறை நடுவா் சுப்புலட்சுமி முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறைறயில் அடைத்தனா். ஆனால் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவா்களை இரு நாள்களில் கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றறத்தில் ஆஜா்படுத்த வேண்டியிருந்தது. இதையடுத்து, 5 பேரையும் கோவை மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

அப்போது அவா்களை வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி வரையில் நீதிமன்றறக் காவலில் வைக்கும்படி மாவட்ட நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டாா்.

இந்நிலையில் கோவையில் கைதான 5 பேருக்கு உதவியதாக உக்கடம் ஜி.எம்.நகரைச் சோ்ந்த பைசல் (26) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் கைதான 5 பேருக்கும், தனக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.