உமறுப்புலவர் பிறந்த தினம் இனி அரசு சார்பில் மாவட்ட அளவில் கொண்டாடப்படும் என அறிவித்ததற்காக அவரது வாரிசுதாரர்கள் தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள உமறுப்புலவர் மணிமண்டபத்தில், அவரது பிறந்த நாளான அக்டோபர் 23-ஆம் தேதியன்று மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உமறுப்புலவர் வாரிசுகளும் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் எச்.ருமைசுதீன் ஃபைஸி, செயலாளர் மு.உமர்கத்தாபு, இணைச் செயலாளர் மோ.பாட்டழகன், கௌரவ ஆலோசகர் கே.பீர் முகம்மது, உமறுப்புலவர் சங்கத்தின் தலைவர் உ.காஜாமைதீன் உள்ளிட்டோர் முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய்னு சொல்லாதீங்க! CM-னு சொல்லுங்க!” துணைப் பேரவைத் தலைவர் ரவிசங்கர்

வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா

திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம்

ஜிவி பிரகாஷ் நடிக்கும் வெக்கை! போஸ்டர் வெளியீடு!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


