தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

தமிழத்தில் இன்று சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்


சென்னை: தமிழத்தில் இன்று சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரத்தில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் காலை மற்றும் பிற்பகலில் ஒரு சில இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com