தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்குத் தடை கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று திமுக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

News image
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :9 டிசம்பர் 2019, 6:10 am

DIN

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று திமுக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறைகள் செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து இதர மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்தலாம் என தீா்ப்பளித்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த மாநில தோ்தல் ஆணையம், புதிய தோ்தல் அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (டிச. 9) தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, திமுக உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. 'உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளபடி, இட ஒதுக்கீடு, வார்டு வரையறை உள்ளிட்ட பணிகளை மாநில அரசு முறையாக செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநில அரசு கடைபிடிக்கவில்லை. இதனால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திமுகவின் இந்த மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், திமுக தேர்தலுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது தேர்தல் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.