விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருச்சி அருகே பள்ளி வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்தது: 6 மாணவர்கள் காயம்

திருச்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :14 டிசம்பர் 2019, 6:18 am

DIN

திருச்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்துள்ள வேங்கூரில் தனியார் மெட்ரிக் பள்ளி (செல்லம்மாள்) உள்ளது. 

இந்த பள்ளிக்கு தஞ்சாவூர் மாவட்டம், மேகளத்தூரில் இருந்து மாரனேரி, இந்தலூர், கிளியூர், பத்தாளப்பட்டை வழியாக பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சனிக்கிழமை காலை மாணவர், மாணவிகளுடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.

திருவெறும்பூர் அருகே செட்டியார்பேட்டை அருகே வரும்போது சாலையோரம் இருந்த வாய்க்காலில் விழுந்து கவிழ்ந்தது. இதில், 10ஆம் வகுப்பு மாணவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். 

அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். திருவெறும்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.