திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்களை திருட முயற்சி நடந்துள்ளது.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்கள் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பா் 16ஆம் தேதியாகும்.
நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் வடகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் கிராமத்தில் சனிக்கிழமை ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான 24 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுக்கள் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைக்க முடியாததால் மனுக்கள் திருட்டு போகவில்லை. ஆனால், அலுவலகத்தில் இருந்த வரிவசூல் தொகை ரூ. 1500 திருடப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து குடவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
துல்கர் சல்மான் - 41 உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

வைபவ் சூர்யவன்ஷிக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கக் கூடாது: ரியான் பராக்
கண்கள் அடிக்கடி துடிப்பதற்கு இதுதான் காரணம்!
வீடியோக்கள்

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

