ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொள்ளாச்சி: மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் படுகாயம்

பொள்ளாச்சியில், குடும்பத் தகராறில் மருமகள் கடித்ததில், மாமியார் தலையில் படுகாயம் ஏற்பட்டு, ஆறு தையல் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :16 டிசம்பர் 2019, 9:36 am

DIN

பொள்ளாச்சியில், குடும்பத் தகராறில் மருமகள் கடித்ததில், மாமியார் தலையில் படுகாயம் ஏற்பட்டு, ஆறு தையல் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (62) பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). சரவணகுமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம்பாளையத்தை சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சரவணகுமார் குடிப்பழக்கத்தில் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி தொடர்ந்து கண்டித்ததால் சரவணகுமார் தனது தாயார் நாகேஸ்வரி வீட்டுக்கு வந்துவிடுவார் . இதனால் கல்பனா நாகேஸ்வரி வீட்டுக்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார் .

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாமியார் - மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். இதுகுறித்து நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நாகேஸ்வரி மின்நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன், அவரைத் தாக்கி தலையைப் பிடித்து பயங்கரமாக கடித்துள்ளார் .இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற நாகேஸ்வரிக்கு தலையில் மருத்துவர்கள் ஆறு தையல் போட்டு உள்ளனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் கல்பனாவை கைது செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.