விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

செங்கல்பட்டு அருகே பரனூரில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்

செங்கல்பட்டு அருகே பரனூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோ மீது கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :19 டிசம்பர் 2019, 10:54 am

DIN


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோ மீது கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தினால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரனூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது கவிழ்ந்தது.

36 டன் எடை கொண்ட கேஸ் டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோ மீது கவிழ்ந்ததில், சரக்கு ஆட்டோவில் இருந்த 4 பேர் வாகனத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

வாகன இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 4 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.