சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாத்தூரில் வாக்காளர்களுக்கு அரிசிப் பை விநியோகம் செய்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முருகேசன் என்பவர் வாக்களிக்கும் மக்களுக்கு அரிசிப் பை விநியோகம் செய்தனர். 

News image
Updated On :30 டிசம்பர் 2019, 12:44 pm IST


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முருகேசன் என்பவர் வாக்களிக்கும் மக்களுக்கு அரிசிப் பை விநியோகம் செய்ததால், போலீசார் கடை உரிமையாளரை அழைத்துச் சென்றனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சாமியார் காலனி பகுதியைச் சேர்ந்த லட்சுமி முருகேசன் என்பவர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரது கணவர் முருகேசன் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் கத்தாளம்பட்டி ஊராட்சி மன்ற பகுதிக்குட்பட்ட அம்மாபட்டி பகுதி பொதுமக்களை தனக்கு வாக்களிக்க கோரியதுடன், வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசிப் பை டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. புதுமனை புகுவிழா அழைப்பிதழில் கீழே நம்பர் பிரிண்ட் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசிப் பை டோக்கனை வைத்து சாத்தூரில் உள்ள ஒரு அரிசி கடையில் அம்மாபட்டி பொது மக்கள் அரிசி வாங்க மொத்தமாக திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாக்காளர்கள் அரிசி வாங்க பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.

Story image

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அந்த குறிப்பிட்ட அரிசி கடை உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்றார். வரக்காளர்களுக்கு, வேட்பாளர் அரிசி விநியோகம் செய்தது சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.