சென்னை: வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
முதலில் நாட்டு மக்களின் வருமானத்தை உயர்த்திய பிறகு, இதுவரை வளர்ச்சிக்காக தியாகம் செய்த அவர்களுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில் இந்தியாவை 11-ஆவது இடத்தில இருந்து 4-ஆவது இடத்திற்கு பாஜக முன்னேற்றியுள்ளது.
வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம்
இந்த பட்ஜெட்டின் மூலம் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


