எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் 

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 12:33 pm IST

சென்னை: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கோவை தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் வனப் பகுதியில் அண்மையில் விடப்பட்டது.ஆனால் அது மீண்டும் திரும்பவும் கோவை பகுதிக்கே நடந்து வந்து சேர்ந்து விட்டது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், " சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றினால் நல்லது என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த யானையை கும்கியாக மாற்றக் கூடாது எனக் கோரிக்கை எழுந்திருப்பது குறித்து பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 101 யானை வழித் தடங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன . அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

அதேநேரம் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலராணா அருண் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், யானை - மனிதர் மோதலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், ஊருக்குள் நுழைந்து பிடிபடும் யானைகளை வேறிடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அருண் பிரசாத் முறையீட்டை திங்கள் பிற்பகலில் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்நிலையில் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த வழக்கு மதியம் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பதில்மனு தாக்கல் செய்தார். அதேபோல் தமிழக தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீவத்சவா தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்தாவது: 

கோவை தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட யானை சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை. அதனை இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் காட்டுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது.

அதற்கு என்ன விதமான சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரு யானையை கும்கியாக மாற்றுவது என்பது அதன் வயது உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுவது. சின்னத்தம்பி விவகாரத்தில் தற்போது அது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.

இவ்வாறு பதில் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.