

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி இத்தகைய பொருட்களை பிளாஸ்டிக் உறையுடன் விற்பனை செய்யும் நிறுவனங்களை, இனி அவற்றை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பின்று அகற்றுவதற்கான தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.
அத்துடன் தங்களது உற்பத்தி பொருட்கள் யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது என்கின்ற விபரத்தை அளிக்க வேண்டும்.
இதன்மூலம் அவற்றை கண்காணிப்பது என்பது எளிதாக இருக்கும்.
தமிழக அரசு ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பிரிட்டானியா, டாடா, கெவின்கேர், ஆம்வே ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.