எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு 

தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2019, 12:05 pm

DIN

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி இத்தகைய பொருட்களை பிளாஸ்டிக் உறையுடன் விற்பனை செய்யும் நிறுவனங்களை, இனி அவற்றை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பின்று அகற்றுவதற்கான தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

அத்துடன் தங்களது உற்பத்தி பொருட்கள் யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது என்கின்ற விபரத்தை அளிக்க வேண்டும்.

இதன்மூலம் அவற்றை கண்காணிப்பது என்பது எளிதாக இருக்கும்.

தமிழக அரசு ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பிரிட்டானியா, டாடா, கெவின்கேர், ஆம்வே ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.