பாஜக அகில இந்தியத் தலைவர்அமித் ஷா ஈரோட்டுக்கு வியாழக்கிழமை வருகிறார். சித்தோடு அருகே கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார்.
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடைபெற்ற பிரமாண்டப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டுச் சென்றுள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈரோட்டுக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 14) வருகிறார்.
புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வியாழக்கிழமை காலை கோவை விமானம் நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில் வந்து இறங்குகிறார். அங்கு, காலை 11 மணிக்கு நெசவாளர்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறார். இதையடுத்து பகல் 12 மணிக்கு சித்தோடு - பெருந்துறை சாலையில் உள்ள ஸ்ரீநகரில் வாக்குச்சாவடி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். தொடர்ந்து, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
கூட்டத்தில், மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் , தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து கங்காபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிற்பகல் 3 மணியளவில் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் புதுதில்லி திரும்புகிறார் என கட்சியின் ஈரோடு மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஏ.பி. கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!







