திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 4-ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.
இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையும் மாலையும் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.
4ஆம் நாளான புதன்கிழமை காலை தங்க முத்துக்கிடா வாகனத்தில் சுவாமியும், வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மனும் வீதியுலா வந்தனர். மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளினர்.
5ஆம் நாளான வியாழக்கிழமை (பிப். 14) இரவு 7.30 மணியளவில் மேலக்கோயிலில் வைத்து, சுவாமி - அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனையாகி, வீதியுலா வருதல் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!






