நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

காங்கிரசுக்கு எத்தனை சீட்டு? இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்: திருநாவுக்கரசர் 

இன்னும் சற்று நேரத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது      தெரிந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 பிப்ரவரி 2019, 7:47 pm IST

கிண்டி: இன்னும் சற்று நேரத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது      தெரிந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  இடம்பெற உள்ளது. முன்னதாக செவ்வாயன்று அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக கட்சிகளுக்கான இடங்கள் குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.      

அதேசமயம் செவ்வாயன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதேபோல் ராகுலுடன் திமுக மாநிலங்களவை எம்.பியான கனிமொழி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது தெரிந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் புதன் மாலை செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:

திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் அமைப்புச் செயலாளரான வேணுகோபால் எம்.பி மற்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், காங்கிரஸ் தேசிய செயலரான முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்திருந்தர்.

அவர்களுடன் நானும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டோம். ஆலோசனை முடிந்து காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் செல்ல உள்ளனர்.

எனவே இன்னும் சற்று நேரத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து மேலிடப் பிரதிநிதிகள் மூலம் தெரிய வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.