கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஸ்ரீமத் அல்லூரி வெங்கடாத்ரி ஸ்வாமிகளின் 142 ஆவது தீர்த்த மஹோத்ஸவம்!

ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீரங்க நாராயண ஜீயரிடத்தில் த்ரீதண்ட காஷாயம் பெற்றவரான ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர் என்னும் ஸ்ரீமத் அல்லூரி

News image
Updated On :24 பிப்ரவரி 2019, 9:55 pm IST

ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீரங்க நாராயண ஜீயரிடத்தில் த்ரீதண்ட காஷாயம் பெற்றவரான ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர் என்னும் ஸ்ரீமத் அல்லூரி வெங்கடாத்ரி ஸ்வாமிகளின் 142-ஆவது தீர்த்த மஹோத்ஸவம் 25.02.2019 அன்று அவருடைய திருவரசு அமைந்துள்ள திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் கொண்டாடப்படுகிறது.

அன்று வெங்கடாத்ரி ஸ்வாமிகளால் ஸ்ரீ ரங்கநாதருக்கு சாற்றப்பட்ட பாண்டியன் கொண்டை, மகர கண்டிகை, சாயக் கொண்டை, கல்லிழைத்த ராஜமுடிகள் முதலான ரத்னா கிரீட திருவாபரணங்கள் அரங்கனுக்கு இவருடைய தீர்த்த மஹோத்ஸவ நாளில் மட்டும் சாற்றப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது சிறப்பு. 

தவிர, அவருடைய திருவரசில் தீர்த்த மஹோத்ஸவத்தன்று ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக யானை மீது காவிரி ஆற்று நீர் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அச்சமயம் ஸ்ரீமத் அல்லூரி வெங்கடாத்ரி ஸ்வாமிகள் இயற்றியுள்ள கீர்த்தனைகளில் நவரத்ன கீர்த்தனைகளை அவருடைய பரம்பரையில் வந்த சம்பிரதாய பஜனை சிஷ்ட கோஷ்டியினர் இசைப்பார்கள். 

நாமும் செல்வோம், வைபவத்து காணுவோம், அரங்கன் அருள் பெறுவோம், ஆச்சாரியன் கடாக்ஷத்திற்கு பாத்திரமாகுவோம்.

ரங்கா! ரங்கா!! ரங்கா!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.