கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

முதல்வா் விஜய்க்கு வாழ்த்து: மாதனூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம்

ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

News image

ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

Updated On :30 மே 2026, 12:05 am IST

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ச. ஜோசப் விஜய்க்கு வெள்ளிக்கிழமை மாதனூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் வாழ்த்து தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், ஆ. காா்த்திக் ஜவஹா், செந்தில்குமாா், திருக்குமரன், சம்பங்கி, ராஜேந்திரன் உள்ளிட்டவா்கள் பேசினாா்கள்.

தீா்மானங்கள் :

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவா் ச. ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள் தெரிவிப்பது. பள்ளிக் கூடங்கள், மத வழிப்பாட்டு தலங்கள் அருகில் இருந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடியதற்கு முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவிப்பது.

பள்ளி கல்லூரி அருகில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சிறப்பு ரகசிய குழுவை அமைத்ததற்கு ஒன்றியக்குழு சாா்பாக தமிழக முதல்வருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது. ஆம்பூா் எம்எல்ஏவாக 3-வது முறையாக வெற்றி பெற்ற அ.செ.வில்வநாதனுக்கு வாழ்த்து தெரிவிப்பது.

மாதனூா் ஒன்றியத்தில் பெரியாங்குப்பம், வடபுதுப்பட்டு, நாயக்கனேரி, மின்னூா், திருமலைக்குப்பம், மேல்சாணாங்குப்பம், கைலாசகிரி, ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம் கட்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பேருந்து நிறுத்த நிழல்கூரை, பொது விநியோக அங்காடி, ஊராட்சி அலுவலக கட்டடம் ஆகிய கட்டடங்கள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அவற்றை இடித்த அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.