அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வராவிட்டாலும் பரவாயில்லை: அமைச்சர் டி.ஜெயக்குமார்

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; அதே வேளை வராவிட்டாலும் பரவாயில்லை என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:47 am IST


அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; அதே வேளை வராவிட்டாலும் பரவாயில்லை என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள  மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில் கலந்து கொண்ட பின் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக கூட்டணி குறித்து கோபம், விரக்தியின் உச்சத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். பாஜக இந்துத்துவா கட்சி என்று கூறும் திமுகவினர், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து அரசியல், அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிக அளவில் பயனடைந்தனர். தற்போது, அதையெல்லாம் மறந்துவிட்டு விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழக மக்கள் எங்கள் கூட்டணியை முழுமையாக நம்புகிறார்கள்.
அதிமுகவைப் பொருத்தவரை கூட்டணியின் கதவுகள் திறந்து உள்ளன.  அந்த வகையில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; அதே வேளை வராவிட்டாலும் பரவாயில்லை. அது அவர்களின் முடிவு என்றார்.
ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது: ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 7 பேரை விடுவிக்க கோரி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்த விவகாரத்தில் விரைவாக முடிவெடுக்குமாறு ஆளுநரைக் கட்டாயப்படுத்த முடியாது. அதேவேளையில், அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் இதுவரை நிராகரிக்கவில்லை. எனவே,  இதுதொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.