/

பாம்பன் ரயில் பாலத்தில் நாளை முதல் மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால் புதன்கிழமை (பிப். 27) முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :26 பிப்ரவரி 2019, 12:52 am IST


பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால் புதன்கிழமை (பிப். 27) முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், ராமேசுவரத்துக்குச் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
 இந்நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால் ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் மற்றும் ராமேசுவரத்துக்குச் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் புதன்கிழமை (பிப். 27) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.