சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மக்களவைத் தேர்தல்: திமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:43 am IST


மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு, புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதர கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் திங்கள்கிழமை (பிப்.25) முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட 90-க்கும் மேற் பட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.மார்ச் 7-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைக் கட்சித் தலைமையிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில்,கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அதற்காக செலுத்திய கட்டணத் தொகை திருப்பித் தரப்படும் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.