குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முகிலன் காணாமல்போன வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

காணாமல்போன சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம்

Updated On :26 பிப்ரவரி 2019, 1:49 am IST


காணாமல்போன சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் ரெ.முகிலன் (52). சூழலியல் செயல்பாட்டாளர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த சில தகவல்களை, சென்னையில் கடந்த 15-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
பின்னர் அவர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அதன் பின்னர் முகிலனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அதே வேளையில் முகிலன், மதுரையும் செல்லவில்லை. மேலும் அவரது செல்லிடப் பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். மேலும், மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முகிலனை மீட்டுத் தருமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 
சிபிசிஐடிக்கு மாற்றம்: இந்நிலையில் விசாரணையை விரைவுபடுத்தும் வகையிலும், முகிலனை மீட்கும் வகையிலும் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து எழும்பூர் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் வழக்கின் ஆவணங்களை, சிபிசிஐடி அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைப்பார்கள் என  கூறப்படுகிறது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.