நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.
பொங்கலை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கோட்ட அளவிலான மாநாடு, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தென் பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் செந்தில்முருகன் வரவேற்றார்.
இதில் மோகன் பாகவத் பேசியதாவது: 1940க்குள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஆர்.எஸ்.எஸ். கிளை தொடங்கப்பட்டது. 1970க்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது. 2010க்குள் அனைத்து ஒன்றியப் பகுதிகளுக்கும் விரிவடைந்தது. இப்போது ஆர்.எஸ்.எஸ். தொடர்பே இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
சூரியனை வழிபடுவது, பசுவை வழிபடுவது, இயற்கையை வழிபடுவது என்பதெல்லாம் நமது தொன்றுதொட்ட பாரம்பரியம். அதை ஒட்டியே நாம் பொங்கல் திருவிழா, காணும் பொங்கல் திருவிழாக்களைக் கொண்டாடி வருகிறோம்.
இந்த விழா நேரத்தில், நமது சமுதாயத்தில் உள்ள தேவையற்ற குறைபாடுகளை நீக்க, நாட்டின் முன்னேற்றத்துக்காக நமது வாழ்க்கையை அர்ப்பணிக்க உறுதி ஏற்க வேண்டும். சமுதாயத்தில் நம்பிக்கையான நல்ல சூழலை உருவாக்குவதே நமது பணி. அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் செயல்பட்டு, நாட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தென் தமிழக அமைப்பாளர் செந்தில்குமார், இணை அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


