டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி முடிவு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

News image
Updated On :15 ஜனவரி 2019, 4:26 am IST


மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்று கேட்கிறீர்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்.
பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஜனவரி 18-ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். அப்போது அவரை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இதுவரை சந்திப்பது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை.மேலும் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் தகவலில் உண்மை இல்லை. அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கும்போது முதலில் செய்தியாளர்களுக்குத்தான் தெரிவிக்கப்படும். 
ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருவது குறித்து கேட்கிறீர்கள். இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 
திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் தாமரை மலருமா என்றும் கேட்கிறீர்கள். அவரவர் சார்ந்திருக்கும் கட்சிகளைப் பற்றி பேசுவது வாடிக்கையானதுதான்.
அதிமுக மூன்றாவது அணியில் இடம்பெறுமா எனக் கேட்கிறீர்கள். அவசரப்படாதீர்கள். நல்லது நடக்கும்.
கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவும், பழைய கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், ஆண்டுக்கு ஆண்டு கூட்டணி மாறியிருக்கிறது என்கிற அடிப்படையில் பாஜக முதலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது. பிறகு திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதன்பிறகு, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது. அரசியல் ரீதியாக கூட்டணி மாறுபட்டிருக்கிறது. தேர்தல் வரும் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.
கொடநாடு விவகாரம் நடைபெற்று முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாத சக்தியற்ற கட்சிகள் இதுபோன்ற அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றன. 
குறுகிய வழியில் அரசியல் லாபம் தேடலாம் என நினைக்கின்றனர். அது நடக்காது. நியாயம் எங்கள் பக்கம் உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.