எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆறுமுகசாமி ஆணையம் முன் ஓபிஎஸ் 29ந்தேதி ஆஜராக உத்தரவு 

ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் துணை முதல்வர் ஓபிஎஸ் வரும் 29ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :22 ஜனவரி 2019, 2:04 pm

DIN

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் துணை முதல்வர் ஓபிஎஸ் வரும் 29ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம்  தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  

இந்த ஆணையத்தின் முன் திங்களன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.  மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை எம்.பி.  செவ்வாயன்று ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் துணை முதல்வர் ஓபிஎஸ் வரும் 29ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அவர் புதன்கிழமை (23.01.2019) ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நாளைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ஓபிஎஸ் கோரி இருந்தார். 

இதுதொடர்பாக அவரது தரப்பில் இருந்து விளக்க கடிதம் ஒன்று ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.  இதனை அடுத்து வருகிற 29ந்தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.