சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் கென்ஜி ஹிரமட்சு தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசியது:-
சென்னையில் யமஹா உள்பட ஜப்பானைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் ஆலைகளை நிறுவியுள்ளன. தொழில் துறை மட்டுமல்லாது, பல்வேறு உள்கட்டமைப்புத் துறைகளுக்கும் ஜப்பான் நிதியுதவிகளை அளித்து வருகிறது. சென்னை பொலிவுறு நகரத் திட்டம், மெட்ரோ ரயில் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் ஆகியவற்றுக்கு கடனுதவிகளை அளித்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான தொழில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஜப்பான் ஆதரவு அளித்து வருகிறது. சென்னை-பெங்களூரு பசுமை வழித் தடம், சென்னை வெளிவட்டச் சாலை திட்டம் போன்றவற்றுக்கும் நிதிகளை அளித்துள்ளது.
இதுபோன்ற திட்டங்களைத் தொடர்ந்து, இப்போது போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினசரி விமான சேவையை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டம் வரும் அக்டோபரில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!

கனரா வங்கி லாபம் 10% குறைவு

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
