கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலம் தமிழகம்: முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பேச்சு 

நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று  சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 

Published On :

சென்னை: நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று  சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 

இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரு முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுடன் தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டின் மூலம் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம், மாநில அமைச்சர்கள்  மற்றும் தொழில்  அதிபர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் பழனிசாமி தனது உரையில் கூறியதாவது:-

நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது

தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. 

உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. 

இதற்கு துணை செய்யும் வகையில் கல்வியிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 48% பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு பெரிய வெற்றி பெற்றது. அதில் 98 திட்டங்களுக்காக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டன. அந்த நிறுவனங்கள், உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

பொதுவாகவே தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. 

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.