அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முழு மனதோடு வரவேற்கிறேன். ராகுல் காந்திக்கு பக்க பலமாக செயலாற்றிடவும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மென்மேலும் வலுச் சேர்த்திடவும் பிரியங்கா காந்திக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மேலும், அவரோடு அறிவிக்கப்பட்டுள்ள மற்ற பொதுச்செயலாளர்களுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


