எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஊர் குளங்களை தூர் வாருங்கள்: மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு கே.எஸ். அழகிரி வேண்டுகோள் 

உங்கள் ஊர் குளங்களை தூர் வாருங்கள் என்று 72 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 2:59 pm IST

சென்னை: உங்கள் ஊர் குளங்களை தூர் வாருங்கள் என்று 72 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பஞ்சத்தில் தமிழக மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் வழங்குகிற திட்டங்களை நிறைவேற்றாத காரணத்தால் இன்றைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் தொலைநோக்கு பார்வையோடு நிதி ஒதுக்கி, திட்டங்களை தீட்டி, தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த வகையில் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதிலிருந்து அ.தி.மு.க. அரசு முழு தோல்வி அடைந்து விட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்க விரும்புகிற காங்கிரஸ் இத்தகைய குற்றச்சாட்டுக்களை எழுப்புவதோடு நின்றுவிடாமல், ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ள விரும்புகிறது.

இந்நிலையில், சமீபத்தில் திருவள்;ர் மாவட்டம், தேவந்தவாக்கம் கிராமத்தில் உள்ள சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத நிலையில் இருந்தது. இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் ரூபாய் 10 லட்சம் செலவில் தூர் வாரும் பணி திட்டமிடப்பட்டு, அதை தொடங்கி வைக்கிற நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்ட இந்தப் பணிக்கு அந்தப் பகுதி மக்களிடையே அமோக வரவேற்பு இருந்ததைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு தமிழக அளவில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு 72 மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் மாவட்டத்தில் ஏதாவது ஒரு குளத்தை தேர்வு செய்து தூர் வாருகிற பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒருநாளில் தூர் வாரும் பணியை சிறப்பாக நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பணிகளை செய்வதன் மூலமாக அரசியல் கட்சி என்பது  ஆக்கப்பூர்வமான சேவை மனப்பான்மையோடு செயல்பட முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் முழுஅளவு ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.