திமுகவைச் சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் வெட்டிக் கொலை
ரெட்டியார்பட்டி: நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் திமுகவைச் சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நெல்லை மாநகர் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. அப்போது சிறப்பாகச் செயல்பட்டதாக கருணாநிதியால் புகழப்பட்டவர்.
இந்நிலையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் செவ்வாயன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டில் செவ்வாய் மாலை புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண் உட்பட மூவரை கொடூரமாக வெட்டிக் கொலைசெய்து விட்டு தப்பித்து விட்டனர்.
தற்போது மரணமடைந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கொலைக்கு காரணம் அரசியல் பகையா அல்லது சொத்து தகராறா என்ற கோணத்தில் போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்