சிலைக் கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு: பொன்.மாணிக்கவேல் 'பகீர்' 

சிலை கடத்தல் வழக்கில் இரண்டு  அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சிலைக் கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு: பொன்.மாணிக்கவேல் 'பகீர்' 

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் இரண்டு  அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவரான பொன் மாணிக்கவேல், புதனன்று நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் சிலை கடத்தல் வழக்கில் இரண்டு  அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com