தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு 

எதிர்வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :13 மே 2019, 3:43 pm

DIN

மதுரை: எதிர்வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளது. எனவே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.