சமூக வலைதளத்தில் அதிமு க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொருளாளர் தீரவளவன்.
இவர், இரு சமூகத்தினரிடையே மோதல் உருவாக்கும் வகையிலும் மற்றும் அதிமுக மற்றும் பாமக குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்துவந்துள்ளார்.
இதுகுறித்து சிறுகடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன் அளித்த புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள தீரவளவனைத் தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







