மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாம்பன் ரயில் பாலம்! முழு வீச்சில் கட்டுமானப் பணிகள்

ராமேஸ்வரத்தின் பாம்பன் பகுதியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் முழு வீச்சில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

News image
Updated On :13 நவம்பர் 2019, 9:36 am

DIN

ராமேஸ்வரத்தின் பாம்பன் பகுதியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் முழு வீச்சில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக புதிய பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள விஸ்வநாதன் என்ற அதிகாரி ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில்..

105 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலம் அதன் ஸ்திரத்தன்மையை இழந்து வருகிறது. எனவே, ரூ.250 கோடி மதிப்பீட்டில் இங்கு புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

Story image

இதையடுத்து பூமி பூஜை வெள்ளிக்கிழமை போடப்பட்டு சனிக்கிழமை முதல் புதிய பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில் புதிய பாலத்தின் வழியாக ரயில்களை அதிவிரைவாக, அதிக எடையை தாங்கக் கூடியதால் பாம்பன் - ராமேஸ்வரம் இடையே அதிக ரயில் போக்குவரத்துடன் இயக்க முடியும் என்று தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம் தான் நாட்டின் முதல் கடல் பாலம் மற்றும் 2-ஆவது நீளமான கடல் பாலம் ஆகும். இதன் நீளம் சுமார் 2.3 கி.மீ. (6,776 அடி அல்லது 2,065 மீ) ஆகும். கப்பல்கள் செல்ல வசதியாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Story image

கடந்த 1913-ஆம் ஆண்டு இப்பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கி 18 மாதங்களில் முடித்து, 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இதிலுள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடியாகும். ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.