தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னை உட்பட வட மாவட்டங்களில் பரவலாக மழை: தென் தமிழகத்துக்கு இன்று கனமழை வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

News image
Updated On :20 நவம்பர் 2019, 2:33 am

DIN

காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை (நவ.20) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூா், திருவள்ளூா், வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.