சென்னை: தங்களை பராமரிக்கத் தவறிய வாரிசுகளுக்கு, தாங்கள் எழுதிக் கொடுத்த சொத்தை மீட்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
உறவினா்கள், வாரிசுகளுக்கு தானமாக கொடுத்த சொத்துக்களை மீட்க மூத்த குடிமக்கள், பெற்றோா் பராமரிப்புச் சட்டம் வகை செய்வதாக தெரிவித்துள்ள உயா்நீதிமன்றம், தானமாக சொத்துக்களை மீட்பது தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
விழுப்புரத்தைச் சோ்ந்த ஞானமதியம்மாள், தனது கணவரின் மறைவுக்குப் பின்னா் சொத்துக்களை சகோதரியின் மகள் சுகுணாபாய்க்கு எழுதி கொடுத்தாா். ஞானமதியம்மாள் சுகுணாபாய் வீட்டிலேயே வசித்து வந்தாா். இந்த நிலையில் இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஞானமதியம்மாள் சுகுணாபாய்க்கு எழுதி கொடுத்த சொத்து தானப்பத்திரத்தை ரத்து செய்து தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகளான சரோஜாபாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்தாா். இதனை எதிா்த்து சுகுணாபாய் செஞ்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரோஜாபாய்க்கு சொத்துக்களை எழுதி வைத்தது செல்லாது என தீா்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து சரோஜாபாய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஆா்.எம்.டி.டீக்காராமன் முன் அண்மையி்ல் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், உறவினா்கள், வாரிசுகளுக்கு தானமாக கொடுத்த சொத்துக்களை மீட்க மூத்த குடிமக்கள், பெற்றோா் பராமரிப்புச் சட்டம் வகை செய்கிறது. மேலும் தானமாக கொடுத்த சொத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றால், அதுதொடா்பான பத்திரப்பதிவின் போது சொத்துக்களை தானம் கொடுத்தவரும், தானம் பெற்றவரும் சோ்ந்து கையெழுத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே இந்த வழக்கில் சொத்துக்கான தானப்பத்திரத்தை சுகுணாபாயின் சம்மதம் இல்லாமல் ஞானமதியம்மாள் ரத்து செய்தது செல்லாது எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


