பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கிணற்றில் விழுந்து மரணம்.. சுஜித் குடும்பத்தை தொடரும் துயரும்

குழந்தை சுஜித்தின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தமிழகத்தை விட்டு அகலாத நிலையில், சுஜித் குடும்பத்தில் கிணற்றில் விழுந்து மரணிக்கும் சம்பவம் இது இரண்டாவது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2019, 10:46 am


திருச்சி: குழந்தை சுஜித்தின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தமிழகத்தை விட்டு அகலாத நிலையில், சுஜித் குடும்பத்தில் கிணற்றில் விழுந்து மரணிக்கும் சம்பவம் இது இரண்டாவது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பிரிட்டோ குடும்பத்தில் கிணற்றில் விழுந்து ஏற்கனவே உறவினர் மரணித்த சில மாதங்களிலேயே சுஜித்தின் மரணமும் நிகழ்ந்துள்ளதுதான் வேதனை.

சுஜித்தின் மாமா ஜான் பீட்டர். ராணுவத்தில் பணியாற்றி வந்த ஜான், ஆண்டு விடுப்பில் கடந்த ஜூன் மாதம் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்திருந்த போது, கிணற்றில் விழுந்த கோழியைக் காப்பாற்ற முயற்சித்து, கிணற்றில் விழுந்து பலியானார்.

Story image

ராணுவத்தில் பணியாற்றியதால் எளிதாக எதிலும் ஏற இறங்கும் துணிச்சலுடன், வெளியில் இருந்து எந்த உதவியும் இல்லாமல், ஒரே ஒரு கயிறை மட்டும் பிடித்துக் கொண்டு கிணற்றில் இறங்கியிருக்கிறார் ஜான். கிணற்றில் இருந்த கோழியை மீட்டு மேலே கொண்டு வந்த போது துரதிருஷ்டவசமாக கயிறு அறுந்து, தண்ணீர் இன்றி வறண்டு இருந்த கிணற்றில் இருந்த கல் மீது ஜான் விழுந்தார். தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்தார்.

அதன்பிறகு, அந்த கிணற்றை வேலி போட்டு மூடிய குடும்பத்தினர், யாரையும் அந்த கிணற்றுப் பக்கம் போக விடாமல் தடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.