திருச்சி: குழந்தை சுஜித்தின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தமிழகத்தை விட்டு அகலாத நிலையில், சுஜித் குடும்பத்தில் கிணற்றில் விழுந்து மரணிக்கும் சம்பவம் இது இரண்டாவது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பிரிட்டோ குடும்பத்தில் கிணற்றில் விழுந்து ஏற்கனவே உறவினர் மரணித்த சில மாதங்களிலேயே சுஜித்தின் மரணமும் நிகழ்ந்துள்ளதுதான் வேதனை.
சுஜித்தின் மாமா ஜான் பீட்டர். ராணுவத்தில் பணியாற்றி வந்த ஜான், ஆண்டு விடுப்பில் கடந்த ஜூன் மாதம் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்திருந்த போது, கிணற்றில் விழுந்த கோழியைக் காப்பாற்ற முயற்சித்து, கிணற்றில் விழுந்து பலியானார்.

ராணுவத்தில் பணியாற்றியதால் எளிதாக எதிலும் ஏற இறங்கும் துணிச்சலுடன், வெளியில் இருந்து எந்த உதவியும் இல்லாமல், ஒரே ஒரு கயிறை மட்டும் பிடித்துக் கொண்டு கிணற்றில் இறங்கியிருக்கிறார் ஜான். கிணற்றில் இருந்த கோழியை மீட்டு மேலே கொண்டு வந்த போது துரதிருஷ்டவசமாக கயிறு அறுந்து, தண்ணீர் இன்றி வறண்டு இருந்த கிணற்றில் இருந்த கல் மீது ஜான் விழுந்தார். தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்தார்.
அதன்பிறகு, அந்த கிணற்றை வேலி போட்டு மூடிய குடும்பத்தினர், யாரையும் அந்த கிணற்றுப் பக்கம் போக விடாமல் தடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


