இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்துகிற வகையில், 6 வது வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தில் ஆட்சேபகரமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் எந்த சாதியை சேர்ந்தவர் என குறிப்பிட்டு, அவரை 'தலித்' என்று அடையாளப் படுத்துகிற வகையில் கருத்து இடம் பெற்று இருக்கிறது. அதேபோல், தலித் என்றால் யார் என்;ற கேள்விக்கு 'தீண்டத்தகாதவர்'; என்று பதில் கூறுகிற வகையில் மற்றொரு கருத்தும் அதில் இருக்கிறது. மேலும் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் பாடப்புத்தகங்களில் கருத்துக்கள் அமைந்துள்ளன.