சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பேனர் வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரபாகர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர், சென்னை மாநகராட்சி ஆணையர், சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
விதிமீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்குப் பதிவு செய்ய ஏன் இவ்வளவு கால தாமதம்
மேலும், நேற்று பிற்பகல் 2.30க்கு விபத்து நேரிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான புகார் மாலை 6 மணிக்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 ஆண்டுகாலம் காவல்துறைப் பணியில் இருக்கும் ஒரு ஆய்வாளருக்கு வழக்குப் பதிவு செய்ய ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது, அதுவும் தந்தை அளித்த புகாரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லையே ஏன்? விபத்து நடந்த இடத்தில் 4 பேனர்கள் இருந்துள்ளன என்று நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.
சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் தொடர்பாக புகாரில் ஒரு வார்த்தை கூட பதிவு செய்யப்படாதது ஏன்? என்ற கேள்விக்கு, புகார் பதிவு செய்யும் போது பேனர் தொடர்பான விஷயத்தை மறந்துவிட்டதாக காவல் ஆய்வாளர் பதில் அளித்தார்.
ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்களை வைக்க தடை அமலில் உள்ளது. அந்த விதிப்படிதானே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது? என்று நீதிபதிகள் கேட்டனர்.
மேலும் படிக்க: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்து: இளம் பெண் பலி
சிசிடிவி கேமரா மூலம் இதுபோன்ற பேனர் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியாதா? யாரோ நம்மை கவனிக்கிறார்கள் என்று உணர்ந்தாலே தவறுகள் குறைந்துவிடும். பேனர் தொடர்பாக பிரச்னைகள் வரும் போதெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்? என்றும் நீதிபதிகள் சரமாரியக் கேட்டனர்.
சுபஸ்ரீ குடும்பத்துக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப் போகிறீர்கள். சுபஸ்ரீ குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகாரிகளிடம் இருந்தும், பேனர் வைத்தவர்களிடம் இருந்தும் வசூலியுங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எச்எஸ்பிசி வங்கியில் 20,000 ஊழியா்கள் பணிநீக்கம்?
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

