சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க.. மதராஸப்பட்டினம் உணவுத் திருவிழா சென்னையில் துவக்கம்!!

விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க வகை செய்யும் மதராஸப்பட்டினம் என்னும் 3 நாள் உணவுத் திருவிழா சென்னை தீவுத் திடலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2019, 5:48 am

DIN


சென்னை: விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க வகை செய்யும் மதராஸப்பட்டினம் என்னும் 3 நாள் உணவுத் திருவிழா சென்னை தீவுத் திடலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத் திடலில் 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்துப் பேசினார்.

அப்போது முதல்வர் கூறுகையில், பாரம்பரிய உணவுகளைத் தவிர்ப்பதால் உடலில் நோய்கள் வருகின்றன. பாரம்பரிய உணவுகளுடன் உடற்பயிற்சியும் அவசியம்.

கம்பு, கேழ்வரகு, சாமை ஆகிய தானியங்களை மீண்டும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மக்கள் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்  என்று கூறினார்.

வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை அதிகளவில் அருந்த வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநில நகர்ப்புற இயக்கம் ஆகியவை சார்பில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு - கலாசார திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அதனை தொடக்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் நடைபெறும் உணவு திருவிழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது. 

அதற்காக பல்வேறு உணவு நிறுவனங்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல வகையான உணவுப் பதார்த்தங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாரம்பரிய உணவுகள், மூலிகை உணவுகள் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து,  செய்தியாளர்களிடம் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:
நமது கலாசாரத்தோடு இரண்டறக் கலந்திருக்கும் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் பல உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன என்றார் அவர்.

அமைச்சர் சரோஜா பேசுகையில்,  சமூக நலத்துறை சார்பில் பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் 2023-க்குள் உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.