வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்தார்.
வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வெப்பச்சலனம் காரணமாக, வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஆக.17) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சாரல் மழை பெய்தது. இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதையடுத்து கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com