குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,338 கோடி மற்றும் ஐஜிஎஸ்டி ரூ.4,500 கோடியை வழங்க வலியுறுத்துவோம். தமிழக வணிகர்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம். 

குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகின்றனர். இலங்கை தமிழர்களை ஏமாற்ற தி.மு.க. நாடகம் போடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com