அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

திருடர்கள் பலவிதம்: சிசிடிவி கேமராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்!

திருடர்கள் பலவிதம் அதில் நாம் இப்போது பார்க்கவிருப்பது, திருட வந்த வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியைக் கைவிட்ட திருடனைப் பற்றி.

News image

சிசிடிவி கேமராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்!

Updated On :9 அக்டோபர் 2019, 12:38 pm IST

திருடர்கள் பலவிதம் அதில் நாம் இப்போது பார்க்கவிருப்பது, திருட வந்த வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியைக் கைவிட்ட திருடனைப் பற்றி.

சென்னை குரோம்பேட்டை அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவன் திடீரென சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் சோகத்துடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியை கைவிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிட்லபாக்கம் ஜெயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஸ்ரீதர் என்பவரது வீட்டில் வாயில் கதவை, நீண்ட ராடைக் கொண்டு திருடன் உடைக்கிறார். பெரும் முயற்சிக்கு பிறகு வீட்டுக் கதவின் வெளியே உள்ள இரும்பு கேட்டின் பூட்டை உடைக்கும் கொள்ளையன் உள்ளே செல்கிறான்.

பிறகு கதவின் பூட்டை உடைக்கும் முன்பாக அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அவன் பார்த்து விடுகிறான். இதனை தொடர்ந்து தனது தலையில் அடித்துக் கொள்கிறான். பின்னர் பூட்டை உடைத்து திறந்த இரும்பு கேட்டை மூடிவிட்டு கொள்ளையன் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறான்.

வெளியூர் சென்று வந்த வீட்டு உரிமையாளர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இந்த காட்சிகள் சிக்கியுள்ளன.

புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிச் சென்ற கொள்ளையன், வேலூர் அருகே பாஸ்தா செய்து சாப்பிட்டுச் சென்ற கொள்ளையர்கள் வரிசையில் இவரும் இணைந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.