25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

திருடர்கள் பலவிதம்: சிசிடிவி கேமராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்!

திருடர்கள் பலவிதம் அதில் நாம் இப்போது பார்க்கவிருப்பது, திருட வந்த வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியைக் கைவிட்ட திருடனைப் பற்றி.

சிசிடிவி கேமராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட திருடன்!

Published On :31 ஜனவரி 2024, 3:49 pm IST

திருடர்கள் பலவிதம் அதில் நாம் இப்போது பார்க்கவிருப்பது, திருட வந்த வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியைக் கைவிட்ட திருடனைப் பற்றி.

சென்னை குரோம்பேட்டை அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவன் திடீரென சிசிடிவி கேமராவைக் கண்டவுடன் சோகத்துடன் தலையில் அடித்துக் கொண்டு கொள்ளை முயற்சியை கைவிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிட்லபாக்கம் ஜெயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஸ்ரீதர் என்பவரது வீட்டில் வாயில் கதவை, நீண்ட ராடைக் கொண்டு திருடன் உடைக்கிறார். பெரும் முயற்சிக்கு பிறகு வீட்டுக் கதவின் வெளியே உள்ள இரும்பு கேட்டின் பூட்டை உடைக்கும் கொள்ளையன் உள்ளே செல்கிறான்.

பிறகு கதவின் பூட்டை உடைக்கும் முன்பாக அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அவன் பார்த்து விடுகிறான். இதனை தொடர்ந்து தனது தலையில் அடித்துக் கொள்கிறான். பின்னர் பூட்டை உடைத்து திறந்த இரும்பு கேட்டை மூடிவிட்டு கொள்ளையன் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறான்.

வெளியூர் சென்று வந்த வீட்டு உரிமையாளர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது இந்த காட்சிகள் சிக்கியுள்ளன.

புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, திருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிச் சென்ற கொள்ளையன், வேலூர் அருகே பாஸ்தா செய்து சாப்பிட்டுச் சென்ற கொள்ளையர்கள் வரிசையில் இவரும் இணைந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.