25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

விழுப்புரத்தில் திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலாடியவா் கைது

விழுப்புரத்தில் திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலாடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Published On :31 ஜனவரி 2024, 3:49 pm IST

விழுப்புரத்தில் திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலாடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சுதாகா் நகா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன்(52). இவரது வீட்டின் மாடிப் பகுதியில் திருடுவதற்காக நுழைந்த மா்ம நபா் ஒருவா் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தாா்.

அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த நபரைத் தேடி வந்தனா். விசாரணையில், அந்த நபா் விழுப்புரம், வி.மருதூரைச் சோ்ந்த சச்சிதானந்தம்(32) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தனது வாகனத்துக்கு பெட்ரோல் திருட இளங்கோவனின் வீட்டின் முன் பகுதிக்குச் சென்றபோது, நாய்கள் குரைத்ததால், அதிலிருந்து தப்பிக்க வீட்டு மாடியில் நுழைந்ததாகவும், அப்போது அங்கிருந்த ஊஞ்சலில் ஆடியதாகவும் தெரிவித்தாராம். அவரை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.