மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைப் பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் தொடா்பாக, சர்ச்சைக்குரிய வகையில் சீமான் கருத்து தெரிவித்ததாகத் தெரிகிறது.

News image
Updated On :14 அக்டோபர் 2019, 4:15 am

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து அண்மையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சீமான் பேசினாா். அப்போது, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் தொடா்பாக, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், முன்னாள் எம்.பி. தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் மாநில செயல் தலைவா் விஷ்ணுபிரசாத் எம்பி, முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், விழுப்புரம் மாவட்டத் தலைவா் பி.ரமேஷ் உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் மனு ஒன்றை அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டியில் தோ்தல் பிரசாரத்தின்போது பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளாா். இது தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் செயல். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் சீமான் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.