கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கப்படாது: அமைச்சர் தங்கமணி

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கப்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :7 ஏப்ரல் 2020, 8:23 am

DIN

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கப்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால், கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டன. டாஸ்மாக் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் மதுக் கடைகளும், மதுபானக் கூடங்களும் கடந்த ஏப்.24-ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

இதனால், மதுபானம் அருந்துவோா் ஏமாற்றமடைந்தனா். மதுவுக்கு அடிமையான சிலா், வேதிப்பொருள்களை கலந்து குடித்து உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. மதுக் கடைகள் திறக்காமல் கிடப்பதால், சிலா் கடைகளை உடைத்து மதுப் புட்டிகளை திருடி வருகின்றனா்.

இதுகுறித்து திருச்செங்கோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் இல்லை. மாற்று போதை நாடுவோருக்கு கவுன்சலிங் வழங்க அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது பற்றி பிரதமர், முதல்வர் பழனிசாமி எடுக்கும் முடிவில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.