தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வாராணசிக்கு சுற்றுலா சென்று வந்த 126 பேருக்கு திருவள்ளூரில் கரோனா பரிசோதனை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாராணசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பிய 126 பேருக்கு திருவள்ளூர் செயல்படாத தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள

News image
கோப்புப்படம்
Updated On :17 ஏப்ரல் 2020, 2:22 pm

DIN

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாராணசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பிய 126 பேருக்கு திருவள்ளூர் செயல்படாத தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்வதற்காக சுகாதாரத்துறையால் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 126 பேர் கடந்த மார்ச்13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை வாரணாசிக்கு சுற்றுலா சென்றார்களாம். அதைத் தொடர்ந்து சுற்றி பார்த்துவிட்டு புறப்படும் போது ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து திரும்பி வரமுடியாமல் அங்கேயே தவித்தனர். இதையடுத்து வாராணசியில் உள்ள ஆட்சியர் மணிவண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை அணுகி சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து 3 பேருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அந்த பேருந்துகள் தமிழகம்-ஆந்திரம் எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து பின்னர் வாகனங்களில் நள்ளிரவில் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் உள்ள பட்டரைபெரும்புதூரில் செயல்படாத தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து அங்கு 126 பேருக்கும் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சோதனை முடிந்த பின்னரே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.