தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 126 பேர் கடந்த மார்ச்13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை வாரணாசிக்கு சுற்றுலா சென்றார்களாம். அதைத் தொடர்ந்து சுற்றி பார்த்துவிட்டு புறப்படும் போது ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து திரும்பி வரமுடியாமல் அங்கேயே தவித்தனர். இதையடுத்து வாராணசியில் உள்ள ஆட்சியர் மணிவண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை அணுகி சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.