குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்
சீர்காழி, குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 3 லட்சம் மதிப்பில், 300 குடும்பங்களுக்கு


சீர்காழி, குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 3 லட்சம் மதிப்பில், 300 குடும்பங்களுக்கு ரூ. 1000 மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறிகள், முட்டை மற்றும் சோப் வகைகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ் நிவாரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி கரோனாவை எப்படி எதிர்கொள்வது பற்றி அறிவுரை வழங்கினார்.
சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் வந்தனா, குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்கள் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீண், அலெக்சாண்டர், பட்டதாரி ஆசிரியர் கோவி நடராஜன், விவேகானந்தா பள்ளி முதல்வர் ஜோஷ்வா பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...