தூத்துக்குடி பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிரிழப்பு
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிரிழந்தது.


தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிரிழந்தது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் இன்று காலை புள்ளிமான் ஒன்று சுற்றித் திரிவதாக அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த புள்ளி மானை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்களை கண்டதும் அந்த புள்ளி மான் ஆங்காங்கே மிரண்டு ஓடியது. இதற்கிடையே சிறிது நேரத்தில் அங்கு அமைக்கப்பட்டிருந்த முள் வேலியில் சிக்கிய புள்ளிமான் காயம் அடைந்து மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்தது.
இதையெடுத்து வனத்துறையினர் உயிரிழந்த மானின் உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...